Sunday, August 15, 2021
மர்ம கோட்டை வாசல்
*மர்ம கோட்டைவாசல்*
🖋️மு.காசிராசன்
_தொடர்-2_
இதுவரை...
ஆர்வத்தின் மிகுதியால் பொன்மேடு சென்றடைந்த கரிகாலன் அதிசய கோட்டை நுழைவாயிலில் அதன் குறிப்பு (அ) எச்சரிக்கை கண்டு உள்ளே செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும்போது டம் என்று ஒரு சப்தம் கேட்டது.
இனி.........
டம் என்ற சத்தத்தை கேட்டதும் உடல் சிலிர்க்க சற்று கிலியுடன் சுற்றும் முற்றும் பார்த்தான் சுமார் ஐந்து அடி உயரமுள்ள வாட்டசாட்டமான ஆள் தான் கரிகாலன், வீரத்திற்கும் தைரியத்திற்கும் குறைவில்லை என்றாலும் இடம் நேரம் மற்றும் சூழல் பயத்தை ஏற்படுத்துவதாக தான் இருந்தது. என்ன சப்தம் என்று அவன் சிந்திக்க முற்படும் முன் மீண்டும் அதே சப்தம் இரட்டையாய் டம் டம் என்று கேட்டது. மூன்றாவது முறை ஒலிக்கும் முன் அது போர்முரசு என்பதை யூகித்து அறிந்து கொண்டான். முரசின் ஒலி எழுந்தவுடன் அந்த கோட்டையின் வாசல் பெரும் இரைச்சல் சப்தத்துடன் திறக்கிறது, திறந்ததும் அவன் கண்ட காட்சி அவனை பிரமிப்பில் ஆழ்த்தியது மிகப்பெரிய பொன்னால் செய்யப்பட்ட கோட்டை ,மின்னும் மாளிகைகள் என கண்ணால் காணும் இடமெல்லாம் பளிச்சிடும் கோட்டையை இருக்கும் என்று எண்ணி அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ச்சி அங்கே எதுவும் இல்லை ஒரே ஒரு நடுகல் ஒரு கழுமரம் தவிர்த்து சுற்றிலும் வெறும் சுத்த ஆற்று மணல் மட்டுமே நடுகள் எனப்படுவது முந்தைய காலத்தில் போரில் தனது வீரத்தை வெளிப்படுத்தி வெற்றியை ஈட்டியவனுக்கும் வீரமரணமடைந்த தளபதி போன்றோருக்கும் ஓர் இனத்தை காப்பாற்ற தனது இன்னுயிரை கொடுத்த மனிதர்களுக்கும் அவர்கள் நினைவாய் நடும் கல் இந்த நடுகல் ஆகும் அந்தக் கல்லில் இறந்த வீரனின் உருவம் அவன் செயல் அவன் மரணம் பற்றிய குறிப்புகள் இருக்கும் அந்த தலைவனின் புகழ் அடுத்த தலைமுறையினர் அறிவதற்காக இந்த நடுகல் முறையை நமது முன்னோர்கள் உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளனர். அடுத்தபடியாக இருக்கும் கழு என்பது கழுமரம் என்று அறியப்படுகிறது ஒரு அரசின் அல்லது நாட்டில் கொடும் குற்றம் செய்தோருக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச கொடுமையான தண்டனை இதுவாகும். ஏழு அடிக்கு மேல் உள்ள ஒரு மரத்தின் உச்சியை கூர்மையாக்கி அது தண்டனைக்குரிய வரை உடலில் துணி இன்றி அந்த மரத்தின் எண்ணெய் தேய்த்து கை கால்களை கட்டி அமர வைப்பர் ,அந்தக் கூர்மையான மரமானது அவன் உடலின் ஒரு பகுதி வழியே சென்று மற்றொரு பகுதியை கிழித்துக்கொண்டு வெளியே வரும் பயங்கர வேதனையுடனும் ஓலத்துடனும் அந்த உயிர் பிரியும் இறந்த நபரின் உடலும் கூட நாய் நரிக்கு இரை ஆகுமே தவிர அடக்கம் செய்யப்பட மாட்டாது. மிகப்பெரிய குற்றம் செய்தவருக்கு மட்டுமே இந்த தண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது இந்த இரண்டையும் கண்டவுடன் "இது யாருக்கான நடுகல்? கண்டிப்பாக இங்கு அரண்மனை இருந்திருக்க வேண்டும். அது இப்போது எங்கே? அந்த அரசனின் பெயர் என்னவாக இருக்கும் ? "என்ற ஆயிரம் வினா நொடிப்பொழுதில் அவன் மனதில் நிரம்பிக் கொண்டிருந்தது இருப்பினும் அந்த பின்குறிப்பு எச்சரிக்கை வரிகள் உள்ளே காலடி எடுத்து வைக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அப்போதுதான் அவன் எதிர்பார்க்காத ஒன்று அவன் கண்ணில் பட்டது அந்த நடுகல்லுக்கு சற்று தொலைவில் தெற்கு நோக்கி அமர்ந்திருந்தாள் இளம் கன்னி ஒருத்தி முகம் சரிவர தெரியவில்லை என்றாலும் அவள் கார்மேக கூந்தலும் இடையழகும் அவள் முகத்தை காண வேண்டும் ,அவள் கண்ணழகு முன்னழகும் காணவேண்டும் என்று துடிக்க வைத்தது. அவன் வயதின் காரணமோ என்னவோ அவனையும் அறியாமல் கோட்டை வாயிலை தாண்டி காலை வைத்து வைத்தது கோட்டைக்குள் நுழைந்தன சுற்றிலும் மணல் மீது சிறு சிறு பனை மரங்கள், உயர்ந்து ஓங்கி நிற்க வேண்டிய பனைகள் முட்டி உயரம் தான் இருந்தது சுற்றிலும் எதையும் நோக்காது அவன் ஆர்வத்துடன் காண எண்ணிய நடுகல்லையும் காணாது . அவன் கன்னியை நோக்கி நடந்தான் "சரக் சரக்" என்ற சப்தம் திரும்பிப் பார்த்தான் சுற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின் அவளை நோக்கி நடந்தான். யாரோ தன்னை பின்தொடர்வதை போல் உணர்ந்தான் இருப்பினும் கன்னி அவள் முகம் காண வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை நெருங்கினான் .தென் திசை நோக்கி அமர்ந்து இருந்தால் அந்தக் கண்ணி கைகளில் பொன் வளையல் ,கூந்தலை பின்னி தொங்கவிட்டிருந்தாள் அந்த கூந்தல் தரையை உரச பூச்செடிகளை பூக்கள் தயாராக இருந்தது நிலம். மெல்ல "யார் நீ? "என்று கேட்டான். பதில் ஏதும் வரவில்லை மீண்டும் "யார் நீ? இங்கே எப்படி வந்தாய் ?" என்று சற்று குரலை உயர்த்தி கேட்டான். பதில் ஏதும் வரவில்லை சற்று பயம் கலந்த தயக்கத்துடன் அவள் தோளில் கை வைத்தான். அவள் எழுந்து திரும்பி நின்றாள் முகத்தில் இமைகள் இமைக்க மறந்து, ஆடாமல் அசையாமல் இருந்தான் அவள் முகம் அவனை அப்படி மாற்றியது. "இவள் பூலோக பெண்ணாக இருக்க" முடியாது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான் .அழகிய மீன் போன்ற விழிகளை உடையவள் காதில் பொன்னால் ஆன தோடு அணிந்து கழுத்தில் எளிமையான பொன்னாபரணம் அணிந்திருந்தாள் பொன்னழகை மிஞ்சும் அளவுக்கு அந்த பென்னழகு பார்ப்பவரை மயக்குமாறு இருந்தது தயங்கியபடி நின்றான் கரிகாலன். "இவள் பூலோக பெண்ணாக இருக்க முடியாது. இவள் தேவலோக பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் " என்று எண்ணிக் கொண் அவள் குரல் அழகை கேட்க துடித்து "உன் பெயர் என்ன?" என்று கேட்டான் அந்த அழகு முகம் மாறத் தொடங்கி அவள் விழிகள் அவளுக்கு பின்னால் பாய்ந்தது என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஒரு கை அவன் தோளைப் பற்றியது, சுமார் ஆறடி மதிக்கத்தக்க ஒரு கரிய நிழல் அவன் முன் தெரிய இதைத்தான் அவள் பார்த்தாளோ என்று பயம் கலந்த சிந்தனையுடன் ஒரு நிமிடம் அவன் இதயத்துடிப்பு அவனிடத்தில் இல்லை. படபடவென இதயம் துடிக்க கிலியுடன் மெதுவாக பின்னே திரும்பினான் கரிகாலன் ........
தொடரும்........
Subscribe to:
Post Comments (Atom)
கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...

No comments:
Post a Comment