Saturday, July 25, 2020

என் அழகு தேவதையுடன் நான்



 
கெட்டியான மாலை வேளையிலே
கொட்டும் மழைச் சாரலின் நடுவினிலே
ஓர் ஒழுகாத ஓலை வீடு
அந்த வீட்டிற்கு முன்னே
இரு இளம்பட்சிகளின் காதல் கூடு
அது பிணைந்திருக்கிறது
வாசமுள்ள வசந்தமரத்தோடு
சில்லென்று காற்றடிக்க
சிறுஞ்சிட்டு தன்சிறகடிக்க
இளஞ்சிட்டும் ஆமோதிக்க
இனி வேண்டாம் தாமதிக்க
அவை கொஞ்சும் வேளையிலே
என்னிடம் தஞ்சம் புகுந்தது
தேனீர்க்குவளை
கைகளில் குவளையை ஏந்தி
கண்களில் காதலை ஏந்தி
முகத்தில் புன்னகை பூத்து
கார்மேகக் கூந்தலிலே
கமலும் மல்லிகை கோர்த்து
வந்தாள் என்னவள்
நஞ்சு கூட நன்மைபயக்கும்
வஞ்சமில்லா உன்
பொற்கரங்களால் கொடுத்தாயானால்
ஆதலின்
நீ கொடுத்த தேனீரின் தித்திப்பு
தேன்சுவையையும் தோற்கடிக்கிறதே அன்பே
என்று நான் கூற
நானத்துடன் நழுவி வந்து
என் தோள்களிலே சாய்ந்தாள்
நான் அருந்திவைத்த அந்தக்குவளை
அசந்து நிற்கிறது
அமிர்தத்தை தன்னுல்
தாங்கியதனால்
நான் ஏழை என்று எண்ணியதில்லை
காரணம்
பொன்னும், மணியும், முத்தும் ,முகிழும்,
பவளமும் , தரணியெங்கும்
தாரைவார்த்துக்கொடுத்தாலும்
கிடைக்காத அற்புத பொக்கிஷம்
என் தோளில் தலைசாய்த்து
இசையினும் இனிதாய்
தன்குரலில்
இதழ்களுக்கு இடைப்பட்டுவரும்
வார்த்தைகளால் என்செவியில்
இன்பத்தேன் பாய்ச்சும்போது
எப்படி என்னமுடியும்
நான் ஏழையென்று
இந்த ஏழைக்குடிலை
ஏழுலகமும் எட்டிப்பார்க்கிறது
இதுபோன்ற காதல்ஜோடியை
எத்தனை காலம்சென்றாலும்
பார்க்கமுடியுமா என்ற ஏக்கத்துடன்….
என்றும் ஈருடல் ஓருயிராய்
பொன்மலரே உன்னுடன்
இறுதிவரை இருக்க
வேண்டுகிறேன் ….

No comments:

Post a Comment

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...