Wednesday, October 26, 2022

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்னர் இந்த கிராமம் இருப்பைகுடி என்றழைக்கப்பட்டு இருஞ்சோ(ழ)நாடு என்றழைக்கப்பட்ட நாட்டின் தலைநகராக இருந்துள்ளது.இதை நாம் வராலாற்று தரவுகளின் மூலம் அறியலாம். இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் சில நிகழ்வுகளை வராலாற்று இடைச்செருகளை நாம் சில ஆவணங்களின் துணை கொண்டு அறிந்துகொள்ள முடிகிறது.அதே போல் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கூட இந்த இருப்பைகுடி என்றழைக்கப்பட்ட இருக்கண்குடியின் வரலாறு குறித்து அறிந்துகொள்ள முடிகிறது ஆனால் பாண்டியர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் கி.பி. 13 ம் நூற்றாண்டிற்கு பிறகு சரிவர அறிந்துகொள்ள முடிவதில்லை .அதிலும் கி.பி.1857 முதல் கி.பி.1990 வரையுள்ள கால கட்டத்தில் சில அதீத நம்பிக்கையாளும் , முரட்டுத்தனத்தாலும் ,அளவுக்குமீறிய நம்பிக்கையினாலும் , சில சதிகாரர்களின் சூழ்ச்சியினாலும் இந்த கிராமத்தின் பாண்டிய மரபினரின் உண்மையான வரலாறு புறக்கணிக்கப்பட்டு போலியான வரலாறு புகுத்தப்பட்டது. இயற்கை தன்மை என்பது தன்னைத்தானே சரிசெய்து கொள்ளுதல் , அதுபோல வரலாறும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் திருத்தி எழுதப்படும். முன்பொரு காலத்தில் இன்று பிரபலமாக வணங்கப்பெரும் இருக்கண்குடி மாரியம்மன் கோவிலில் குறைவான மக்களே வந்து வணங்கி செல்வர் காரணம் அம்மன் சக்திவாய்ந்தவராக இருந்தாலும் ஆற்றுக்கு நடுவினிலே இருக்கின்ற அம்மனை வணங்க வேண்டும் என்றால் ஆற்றைக்கடக்க வேண்டும் .ஓடையளவு எந்நேரமும் ஆற்றில் ஓடிக்கொண்டு தான் இருக்கும் .அதுக்கும் மேல் ஆற்றுமணல் அவ்வளவு அழகாக பணிபோல் படர்ந்திருக்கும் நடந்து சென்றாலே கரண்டைக்கால் தரைக்குள் பதியும் அப்படி இருக்கையில் கோவிலுக்கு வருபவர்கள் வண்டிகட்டிக்கொண்டுதான் வருவார்கள் . அப்படி வரும்போது வண்டியின் சக்கரம் மணலில் பதிந்துகொள்ளும் அதை மீட்க்க அருகில் உள்ளவர்கள் உதவி செய்வார்கள் .அப்படி அதிகம் பிரபலியம் ஆகாத சமயம் என்பதாலும் , தொலைதூரம் வண்டிகட்டிக்கொண்டுவந்து வணங்கவேண்டியுள்ளதாலும் திருவிழா நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்துள்ளது . வரும் பக்தர்கள் தங்கி உணவருந்த ஏதுவாக கோவிலின் கிழக்கு வாசலின் முன்பு இருக்கண்குடி தேவேந்திர குல வேளாளர் மக்கள் கூரையினால் மடம் அமைத்து சேவை செய்து வந்துள்ளனர் . இங்கு வரக்கூடிய பக்தர்களில் அன்று முதல் இன்று வரை அம்மனுக்கு கிடாய் வெட்டி வழிபடுதல் என்பது தனிச்சிறப்பு அவ்வறு வரும் கிடாய்களை இருக்கண்குடியை சேர்ந்த ஊர்க்குடும்பர் அல்லது இருக்கண்குடியை சேர்ந்த முக்கிய நபர்கள் வெட்டுவது தான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இருக்கண்குடி கிராமத்தினர் பல சவாலான சூழல்களை எதிர்கொண்டு வந்துள்ளனர் இருப்பினும் எந்த சூழ்நிலையிலும் தனது தன்மானத்திற்கு ஒரு இடர் என்று வந்தால் விட்டுக்கொடுக்காது அதில் வெற்றிகண்டும் வந்துள்ளனர். அவ்வகையில் இந்த வழக்கமானது ஏற்படக்காரணம் என்னவென்றால் அருகில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் பஞ்சாயத்து தீர்ப்பின் மூலம் ஒரு நிரந்தர தீர்வை ஏற்டுத்திக் கொடுப்பதில் அந்த காலக்கட்டதில் இருக்கண்குடி சிறந்து விளங்கியுள்ளது. எந்த பஞ்சாயத்திலும் தீர்க்கமுடியாத பஞ்சாயத்து கூட இருக்கண்குடியில் தீர்த்துவைக்கப்பட்டுள்ளதாக அந்தகால பெரியோர்கள் தெரிவிக்கின்றனர். இதனடிப்படையில் நமது ஊரில் இன்னொருவர் அருவா எடுத்து வர கூடாது, தொழிலுக்காக கூட அருவா எடுத்து வந்து பிரிதொரு ஊர்க்காரர் வந்து வெட்ட கூடாது என்பதால் இருக்கண்குடி ஊர்க்குடும்பர் மற்றும் இருக்கண்குடி கிராம முக்கிய நபர்கள் மேற்படி பணியினை செய்துவந்தனர் . அதற்கு கிடைக்கும் காணிக்கையையும் , ஆட்டின் தலை மற்றும் கால்களை ஊர்க்குடும்பரிடம் கிடாய் வெட்டுபவர் ஒப்படைக்க வேண்டும் . அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை ஊர்நலனுக்கு பயன்படுத்துவார்கள். இந்த வழக்கம் எப்படி மாறியது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம் . அதற்கான விடை தான் சற்றுவினோதம் . இருக்கண்குடியில் மாரியம்மன் சிலையை தோண்டி எடுத்த காலத்தில் ஊர்க்குடும்பராய் இருந்தவர் சக்கா புக்கா (எ) இருளப்பக்குடும்பர் அவர் வழியில் இன்று இருக்கண்குடி ஊர்க்குடும்புகளில் ஒன்பது வகையறா இருக்கின்றார்கள் .அதுபோக மேலமடை கண்மாய் மடைகளுக்கான மடைக்குடும்பர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.இவ்வகையில் குடும்பர் வகையறாவில் வருகின்ற வீரமகாளி குடும்பர் (இவரை வீரமாலி என்றும் அழைப்பர்) வழக்கம்போல் கிடாய் வெட்ட சென்றார். அந்த நாளில் கோவிலுக்கு வந்திருந்த ஒரு வயதான பாட்டியின் கம்மலை ஒரு திருடன் திருட , ஆபரணத்தை இலுத்த வேகத்தில் காதில் காயம்பட்டு இரத்தம் வர ரத்தத்துடன் அப்போதிருந்த காவல்துறையினரிடம் புகார் கொடுக்கின்றனர். இதை விசாரிக்க காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகின்றனர். அப்போது கிடாய் வெட்டிவிட்டு சட்டையில் ரத்தக்கறையுடன் வருகிறார் வீரமகாளி. இதைப்பார்த்த அப்போதிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் எந்த விசாரணையும் மேற்க்கொள்ளாமல் எந்த கேள்வியும் கேட்காமல் அவரை அடித்து விசாரணைக்கு இழுத்துசெல்கின்றனர். விசாரணையின் முடிவில் அவர் சட்டையில் இருந்தது ஆட்டின் ரத்தம்தான் என்று நிருபிக்கப்பட்டது. அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். வீட்டிற்கு வந்த வீரமகாளி இந்த வேலையை நாம் செய்ய போய்தான எந்த கேள்வியும் கேட்க்காமல் ஒருத்தர் வந்து நம்மை அடித்துவிட்டார். இதே வேறு ஏதேனும் காரணம் சொல்லி எவனாவது நம்மீது கைவைத்துவிட்டு திரும்பியிருக்க முடியுமா? அதிகாரியாகவே இருந்தாலும் நம்மிடம் தன்மையாகத்தானே பேசியிருப்பார் இப்படி எந்த கேள்வியும் கேட்காமல் நம்மீது கை வைத்திருக்க மாட்டாரே ? என்று பல்வேறு கேள்விகள் மனதில் ஓட இறுதியில் இந்த வேளையை இனி நாமும் செய்ய வேண்டாம் நமது பிள்ளைகளும் செய்ய வேண்டாம், யார் வேண்டுமானலும் அந்த பணியினை செய்துகொள்ளட்டும் என்று முடிவெடுக்கிறார். அதன் பின்னர் சிறிதுகாலம் இருக்கண்குடியை சேர்ந்த சிலர் அப்பணியினை செய்து வந்தனர். அதன் பின் யார்வேண்டுமானாலும் கிடாய்வெட்டிக்கொள்ளலாம் என்ற நிலை வந்ததது. அதனுடன் ஊர்க்குடும்பருக்கு கொடுத்துவந்த ஆட்டின் தலையும் , காலும் , மரியாதையும் மறைக்கப்பட்டது. அன்றைய காலகட்டதில் ஒரு காவல்துறை அதிகாரி செய்த சிறிய தவறு பின்னாளில் ஒரு வரலாற்றை அழித்துவிட்டது . பின்னர் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் 2022 ல் இளைஞர்கள் ஒன்றிணைந்து வரலாற்று ஆவணங்களை ஆவணப்படுத்திக்கொண்டிருக்கின்ற சமயத்தில் , போலியாக ஒரு வரலாற்றை உருவாக்கும் நோக்கில் பூசாரி ஒருவரை கிடாய்வெட்டும் இடம் அருகில் நிறுத்தி ஆட்டு தலையும் ,காலும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர் .அங்குள்ள வரலாறு தெரிந்த இளைய தலைமுறையினரால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது. இப்படி சின்ன சின்ன காரணங்களால் நமது அறியாமையால் நமது முக்கியத்துவத்தை நாமே உணராமல் நமது வரலாற்றை தொடர்ந்து இழந்து வருகிறோம் . தொடரும்.........

No comments:

Post a Comment

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...