பொழுது
சாய்ந்தது
இருள்
சூழ்ந்தது
இருள்நீக்கி
ஒளிகொடுக்க
சந்திரன்
வந்தான் உற்சாகமாய்
திடீரென
ஒளிந்துகொண்டான்
சிறிது
நேரத்தில்
அவனைவிட
பிரகாசமான ஒளி
என்னருகில்
ஒளிர்வதைக்கண்டேன்
திரும்பிப்பார்த்தேன்
என்
கண்னுக்கினியவள் என்
கண்ணருகே
நின்றாள்
எங்கே
அவள் கண்ணில் பட்டால்
அவள்
அழகில் மயங்கி
கைகட்டி
சேவகம் செய்யவேண்டுமே
என்று
பயந்தானோ என்னவோ
அவள்
செல்லும்வரை
அவன்
வரவும் இல்லை
என்னவள்
பிரகாசம் குறையவும் இல்லை
சற்று
நிமிர்ந்து நட்சத்திரங்களைப் பார்த்தேன்
மின்னும்
நட்சத்திரங்கள் கண்சிமிட்டாமல்
அவளைப்பார்த்துக்கொண்டிருந்தன
அவைகளும்
ஒன்று சேர்ந்து மாலையாகி
அவள்
கழுத்தில்விழ என்னதவம் செய்யவேண்டுமோ
என்று
கூடிப்பேசிக்கொண்டனபோலும்
அமைதியான
அந்த வேளையிலே
அழகிய
தென்றல் அவளை தீண்டி
அவள்
கருங்கூந்தலில் மோதி வெளியே வந்ததும்
சந்தன
மரங்களில் மோதி
மல்லிகை
இதழ்களைத் தட்டி
அனிச்சம்
மலரை உரசி வந்த வாசமுடன்
என்னைக்கடந்து
சென்றது
வழியில்
ஒரு பட்டமரம் குறுக்கிட்டது
அவளைத்தொட்ட
தென்றல் அதன்மீது
பட்டவுடன்
அந்த பட்டமரம்
தளிர்த்தது
பூக்களைப்பூத்தது
அந்தப்பூக்களெல்லாம்
ஒன்றுடன் ஒன்று
போட்டிபோட்டது
அவள் கூந்தலில் குடியிருக்கும்
குடுப்பனை
யாருக்கு என்று
மீண்டும்
ஒரு இனிமையான தென்றல்
ஆனால்
சற்றுவித்தியாசத்துடன்
மோகத்தைத்
தூண்டும் விதமாய்
காதல்
தாகத்தை சீண்டும் விதமாய்
என்னை
தழுவிக்கொண்டது அந்த தென்றல்
அது வேறேதுமில்லை என்னவளின் மூச்சுக்காற்றுதான்
அவள்
மூச்சுக்காற்றில் நான் மூர்ச்சையானேன்
மதியை
மயக்கிய அழகி
வெண்
மதியை மயக்கிய பேரழகி
என்
காதல் கண்மணியுடன் இரவில் ஒரு பொழுது
கரம்கோர்த்து
கதிரவன் வரும்வரை
காதல்
கீதம் இசைக்க காதில் அவள்
இனிய
குரல் என்னும் இன்பத்தேன் சுவைக்க
கடந்து
செல்லட்டும் காதல் இரவாய்……….