நிலம்
பெருமைகொண்டது
உன்பாதம் பட்டதால்
நீர்
மோட்சம் பெற்றது
உன்
மேனியைத் தொட்டதால்
காற்று
உன்னிடம் கைதியானது
உன்மூச்சு
பட்டதால்
வானம்
வண்ணமயமானது
உன்
பார்வை பட்டதால்
ஆதவனும்
அசந்துபோனான்
உந்தன்
அழகுமுகம் பார்த்ததால்
அன்பே!
நான்
என்ன பாவம் செய்தேனோ?
என்னை
காதலித்து கரம்பிடித்து
பஞ்சபூதத்திற்கும் என்னை
எதிரியாக்கிவிட்டாயே!!
நான் என்ன பாவம் செய்தேனோ....
No comments:
Post a Comment