ஆருயிராய் இருப்பவளே
இன்பம் பெற்றவளே
ஈடுஇனை அற்றவளே
உலகத்து உண்மைகளை
ஊருக்கே உணர்த்தியவளே
என்எண்ணங்கள் யாவிலும்
ஏற்றத்தில் அமர்ந்தவளே
ஐந்திணைகள் பெற்றவளே
ஒற்றுமை எண்ணத்தை
ஓலைச்சுவடியில் கொடுத்தவளே
ஔவியமின்றி அஃதுடன்
ஆயுதமாய் நிற்பவளே
என் தமிழன்னையே உன்னை
என் சொல்லி வாழ்த்துவனே….