Monday, October 26, 2020

இரண்டற கலந்தவள்

 

அன்னையாய் பிறந்தவளே
ஆருயிராய் இருப்பவளே
இன்பம் பெற்றவளே
ஈடுஇனை அற்றவளே
உலகத்து உண்மைகளை
ஊருக்கே உணர்த்தியவளே
என்எண்ணங்கள் யாவிலும்
ஏற்றத்தில் அமர்ந்தவளே
ஐந்திணைகள் பெற்றவளே
ஒற்றுமை எண்ணத்தை
ஓலைச்சுவடியில் கொடுத்தவளே
ஔவியமின்றி அஃதுடன்
ஆயுதமாய் நிற்பவளே
என் தமிழன்னையே உன்னை
என் சொல்லி வாழ்த்துவனே….

Monday, October 5, 2020

கவி தை க்கு சொந்தம்

 கவிதை பிறப்பது

இந்த கவிஞனின் கைகளிலோ

பேனாவின் முனையிலோ 

இல்லை

என் கண்மணி உன்

கண்களில் பிறக்கிறது

அது

என் மனக்கதவை 

 திறக்கிறது

பின் வார்த்தைகளில் வழுக்கி

காகிதத்தில்  விழுந்து கரைகிறது....

கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...