ஆருயிராய் இருப்பவளே
இன்பம் பெற்றவளே
ஈடுஇனை அற்றவளே
உலகத்து உண்மைகளை
ஊருக்கே உணர்த்தியவளே
என்எண்ணங்கள் யாவிலும்
ஏற்றத்தில் அமர்ந்தவளே
ஐந்திணைகள் பெற்றவளே
ஒற்றுமை எண்ணத்தை
ஓலைச்சுவடியில் கொடுத்தவளே
ஔவியமின்றி அஃதுடன்
ஆயுதமாய் நிற்பவளே
என் தமிழன்னையே உன்னை
என் சொல்லி வாழ்த்துவனே….
No comments:
Post a Comment