Wednesday, December 16, 2020

வழி சொல்

 உன் விழி ஈர்ப்பு விசையாலே

                      திசைமாறிச்சென்ற என்னை

உன் மொழி இன்பத்தில் 

                       திசைதிருப்பிய கயல்விழியாளே

என் வழி மறந்து போனேன் 

        நீயும் நானும் கரம்கோர்த்து

நம்வழி செல்வோமா...?!
 

தென்றலவள்

 தென்றல் என்னை தீண்டியது
தேவதை உன் 
மூச்சுக்காற்றாய்.....

மதி மயக்கம்

 வெண்மதி உன் முகம் கண்டு

என் மதி மயங்கியது........

Wednesday, December 2, 2020

என்(னை) காதலி

 உன் கடைக்கண் பார்வை 

     போதுமடி

நான் கட்டுக்கட்டாய் 

 கவிதை எழுத

உன் புன்னகை ஒன்று

போதுமடி

புது புத்தகம் ஒன்றை 

நான் படைக்க...

என்னவள்

 கண்களில் காதல் 

உதட்டில் கம்யூனிசம்.....!


கிடாய் வெட்டும் உரிமையை தொலைத்த ஊர்க்குடும்பர்கள்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...