உன் விழி ஈர்ப்பு விசையாலே
திசைமாறிச்சென்ற என்னை
உன் மொழி இன்பத்தில்
திசைதிருப்பிய கயல்விழியாளே
என் வழி மறந்து போனேன்
நீயும் நானும் கரம்கோர்த்துநம்வழி செல்வோமா...?!
உன் விழி ஈர்ப்பு விசையாலே
திசைமாறிச்சென்ற என்னை
உன் மொழி இன்பத்தில்
திசைதிருப்பிய கயல்விழியாளே
என் வழி மறந்து போனேன்
நீயும் நானும் கரம்கோர்த்துநம்வழி செல்வோமா...?!
போதுமடி
நான் கட்டுக்கட்டாய்
கவிதை எழுத
உன் புன்னகை ஒன்று
போதுமடி
புது புத்தகம் ஒன்றை
நான் படைக்க...
கவிதை பிறப்பது
இந்த கவிஞனின் கைகளிலோ
பேனாவின் முனையிலோ
இல்லை
என் கண்மணி உன்
கண்களில் பிறக்கிறது
அது
என் மனக்கதவை
திறக்கிறது
பின் வார்த்தைகளில் வழுக்கி
காகிதத்தில் விழுந்து கரைகிறது....
பொழுது
சாய்ந்தது
இருள்
சூழ்ந்தது
இருள்நீக்கி
ஒளிகொடுக்க
சந்திரன்
வந்தான் உற்சாகமாய்
திடீரென
ஒளிந்துகொண்டான்
சிறிது
நேரத்தில்
அவனைவிட
பிரகாசமான ஒளி
என்னருகில்
ஒளிர்வதைக்கண்டேன்
திரும்பிப்பார்த்தேன்
என்
கண்னுக்கினியவள் என்
கண்ணருகே
நின்றாள்
எங்கே
அவள் கண்ணில் பட்டால்
அவள்
அழகில் மயங்கி
கைகட்டி
சேவகம் செய்யவேண்டுமே
என்று
பயந்தானோ என்னவோ
அவள்
செல்லும்வரை
அவன்
வரவும் இல்லை
என்னவள்
பிரகாசம் குறையவும் இல்லை
சற்று
நிமிர்ந்து நட்சத்திரங்களைப் பார்த்தேன்
மின்னும்
நட்சத்திரங்கள் கண்சிமிட்டாமல்
அவளைப்பார்த்துக்கொண்டிருந்தன
அவைகளும்
ஒன்று சேர்ந்து மாலையாகி
அவள்
கழுத்தில்விழ என்னதவம் செய்யவேண்டுமோ
என்று
கூடிப்பேசிக்கொண்டனபோலும்
அமைதியான
அந்த வேளையிலே
அழகிய
தென்றல் அவளை தீண்டி
அவள்
கருங்கூந்தலில் மோதி வெளியே வந்ததும்
சந்தன
மரங்களில் மோதி
மல்லிகை
இதழ்களைத் தட்டி
அனிச்சம்
மலரை உரசி வந்த வாசமுடன்
என்னைக்கடந்து
சென்றது
வழியில்
ஒரு பட்டமரம் குறுக்கிட்டது
அவளைத்தொட்ட
தென்றல் அதன்மீது
பட்டவுடன்
அந்த பட்டமரம்
தளிர்த்தது
பூக்களைப்பூத்தது
அந்தப்பூக்களெல்லாம்
ஒன்றுடன் ஒன்று
போட்டிபோட்டது
அவள் கூந்தலில் குடியிருக்கும்
குடுப்பனை
யாருக்கு என்று
மீண்டும்
ஒரு இனிமையான தென்றல்
ஆனால்
சற்றுவித்தியாசத்துடன்
மோகத்தைத்
தூண்டும் விதமாய்
காதல்
தாகத்தை சீண்டும் விதமாய்
என்னை
தழுவிக்கொண்டது அந்த தென்றல்
அது வேறேதுமில்லை என்னவளின் மூச்சுக்காற்றுதான்
அவள்
மூச்சுக்காற்றில் நான் மூர்ச்சையானேன்
மதியை
மயக்கிய அழகி
வெண்
மதியை மயக்கிய பேரழகி
என்
காதல் கண்மணியுடன் இரவில் ஒரு பொழுது
கரம்கோர்த்து
கதிரவன் வரும்வரை
காதல்
கீதம் இசைக்க காதில் அவள்
இனிய
குரல் என்னும் இன்பத்தேன் சுவைக்க
கடந்து
செல்லட்டும் காதல் இரவாய்……….
நிலம்
பெருமைகொண்டது
உன்பாதம் பட்டதால்
நீர்
மோட்சம் பெற்றது
உன்
மேனியைத் தொட்டதால்
காற்று
உன்னிடம் கைதியானது
உன்மூச்சு
பட்டதால்
வானம்
வண்ணமயமானது
உன்
பார்வை பட்டதால்
ஆதவனும்
அசந்துபோனான்
உந்தன்
அழகுமுகம் பார்த்ததால்
அன்பே!
நான்
என்ன பாவம் செய்தேனோ?
என்னை
காதலித்து கரம்பிடித்து
பஞ்சபூதத்திற்கும் என்னை
எதிரியாக்கிவிட்டாயே!!
நான் என்ன பாவம் செய்தேனோ....
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் வட்டம் இருக்கண்குடி கிராமம் இன்று பலரால் எளிதாக அறிந்துகொள்ள முடியும். வரலாற்று காலத்தில் கி.பி.831 க்கு முன்...